Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சித்ராவின் முகம் கருப்பாக இருந்தது”.. சித்ராவின் வழக்கில் மேலும் ஒரு பரபரப்பு..

TELEVISION

“சித்ராவின் முகம் கருப்பாக இருந்தது”.. சித்ராவின் வழக்கில் மேலும் ஒரு பரபரப்பு..

சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பதற்கு முன் தனது வீட்டிற்கு வந்தபோது அவரது முகம் கருப்பாக இருந்ததாக அவரின் அம்மா கூறிய செய்தி திடுக்கிட வைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த VJ சித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சித்ராவின் மரணம் குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கினர். இவ்வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளீவந்தார்.

ஜாமீனில் வெளிவந்த அவர், சித்ரா மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கும், முன்னாள் எம். எல். ஏ. ஒருவருக்கும், மாஃபியா கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என கூறி பீதியை கிளப்பினார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகையும் சித்ராவின் தோழியுமான ரேகா, திடீரென்று ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறினார். அதாவது சித்ரா அவ்வளவு நல்லவர் இல்லை எனவும், சித்ராவும் ஹேமந்த்தும் தங்கியிருந்த அறைக்கு தான் சென்ற போது நிறைய காண்டம் இருந்ததாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து சித்ராவிற்கும் வெளிநாட்டில் விபச்சாரி அழகிகளுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது.

மேலும் ஹேமந்தின் நெடுங்கால நண்பர் ஒருவர் “ஹேமந்த் நல்லவன் கிடையாது, அவனுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் போடும் பழக்கம் இருந்தது. சித்ராவை அவன் தான் கொன்றிருக்ககூடும்” என கூறி பீதியை கிளப்பினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சித்ராவின் அம்மா தனது மகள் சித்ரா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தததாகவும் அப்போது அவரது முகமே சரியில்லை, கருப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் என்னவென்று கேட்டபோது சித்ரா ஒன்றும் சொல்லவில்லை எனவும் சிறிது நேரத்திலேயே ஹேமந்த் சித்ராவை வெளியே அழைத்து கொண்டு போய்விட்டார் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒவ்வொறு நாளும் சித்ரா மரணத்தினை குறித்து திடுக்கிடும் தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் சித்ராவின் அம்மா பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளதாக வெளிவந்த தகவல் திகிலை கிளப்பியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top