TELEVISION
சன் டிவிக்கு தாவுகிறாரா ஆல்யா மானசா…? உண்மை நிலவரம் என்ன?
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சன் தொலைக்காட்சியில் ஒரு புதிய தொடரில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது எந்தளவிற்கு உண்மை என பார்க்கலாம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” தொடரில் செம்பா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா. இவருக்கும் அதே தொடரில் நடித்த சஞ்சீவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பின் தனது உடலை பழையபடி மெருகேற்றி மீண்டும் “ராஜா ராணி” இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.
இதனிடையே மீண்டும் அவர் கர்ப்பம் ஆக “ராஜா ராணி 2” சீரீயலில் இருந்து விலகினார். சமீபத்தில் தான் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் ஆல்யா மனசா படப்பிடிப்பை எல்லாம் தள்ளி வைத்து விட்டு தற்போது முழு நேரம் தனது குழந்தையை நல்ல படியாக பார்த்துக் கொள்ளும் தாயாக இருக்கிறார்.
இவரது கணவரான சஞ்ஜீவ் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கயல்” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆல்யா மானசா ஒரு புதிய தொடரில் நடிக்க உள்ளதாகவும் அதுவும் சன் தொலைக்காட்சியில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.
எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. மேலும் ஆல்யா மானசா அவ்வாறு புதிய தொடர் ஒன்றில் நடித்தால் நிச்சயமாக விஜய் தொலைக்காட்சியில் தான் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
