REVIEW
“விருமன்” பாக்கலாமா? வேணாமா? A Short Review
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “விருமன்”. இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்..
தனது தாய் சரண்யாவின் மரணத்திற்கு தனது தந்தை பிரகாஷ் ராஜ் தான் காரணம் என்பதனால் கார்த்தி தனது தந்தையையே கொல்லத் துடிக்கிறார். அதனால் சரண்யாவின் தம்பியாக வரும் ராஜ்கிரண் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்றுவிடுகிறார்.
அதே போல் பிரகாஷ் ராஜ் தனது மூத்த மகன்கள் தன்னை நம்பியே பிழைக்க வேண்டும் என எண்ணுகிறார். கார்த்தி தனது அண்ணன்களை மீட்கப்போராடுகிறார். இறுதியில் கார்த்தி தனது அண்ணன்களை மீட்டாரா? இல்லையா? தனது தந்தையான பிரகாஷ் ராஜ்ஜை என்ன செய்தார்? என்பதே “விருமன்” திரைப்படத்தின் கதை.
கார்த்தி கிராமத்து இளைஞனாக ரவுஸு காட்டும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அறிமுக கதாநாயகி அதிதி ஷங்கரின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதே போல் பிரகாஷ் ராஜ், சிங்கம் புலி, ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நன்றாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பிள்ஸ் என்றால் அது ஒளிப்பதிவும், இசையும் தான். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசை அபாரம். செல்வக்குமாரின் ஒளிப்பதிவு மாஸ். வெங்கட் ராம் படத்தொகுப்பு பக்கா.
எனினும் திரைக்கதையில் சற்றே சறுக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. இத்திரைப்படத்தின் கதை ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய கதை. அப்படியும் திரைக்கதையை சரியாக நகர்த்தியிருந்தால் மாஸாக வந்திருக்கும். ஆனாலும் பல இடங்களில் சறுக்கியதால் பார்வையாளர்களை சோதிக்க வைக்கிறது. சூரியின் காமேடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. எமோஷனல் காட்சிகள் ஒகே ரகம். மொதத்ததில் “விருமன்” ஒரு முறை குடும்பத்துடன் சென்று பார்த்து வரலாம்.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)