Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திடீரென ஷாக் கொடுத்த அம்மா.. கண்ணீர் விட்டு அழுத காவ்யா..

TELEVISION

திடீரென ஷாக் கொடுத்த அம்மா.. கண்ணீர் விட்டு அழுத காவ்யா..

ஈரமான ரோஜாவே தொடரில் பார்த்தியின் அம்மா திடீரென சொன்ன அந்த வார்த்தையால் உடைத்து போனார் காவ்யா.

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக பார்வையாளர்களை கவர்ந்து வரும் தொலைக்காட்சி தொடர் “ஈரமான ரோஜாவே 2”. இதில் பிக் பாஸ் கேப்ரியல்லா காவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

காவ்யா ஜீவாவை காதலித்து வர இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பார்கள். அதே நேரம் காவ்யாவின் அக்கா பிரியாவிற்கு ஜீவாவின் அண்ணன் பார்த்திபனை மணம் முடிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். ஆனால் திருமணம் நடைபெறும் போது பிரியாவை கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

எப்படியாவது இந்த திருமணம் நடைபெற வேண்டும் என காவ்யாவை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள். அதே போல் திரும்பி வந்த பிரியாவை ஜீவாவிற்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள்.

இவ்வாறு இவர்களின் வாழ்க்கை போய் கொண்டு இருக்கையில் காவ்யாவிற்கும் பார்த்திக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பார்த்திபன் காவ்யாவை நல்லபடியாக அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பார்த்தியின் அம்மா, ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அங்கே அவரின் தோழி ஒருவரை பார்த்தார். அவர் பார்த்தியின் அம்மாவிடம் காவ்யாவை ஒரு பையனுடன் அடிக்கடி பார்த்திருக்கிறேன் என கூறினார். அதை கேட்டு ஷாக் ஆன பார்த்தியின் அம்மா வீட்டிற்கு வந்து காவ்யாவிடம் ”நீ திருமணத்திற்கு முன் வேறு யாரையாவது காதலித்தயா?” என கேட்டார்.

அதற்கு ஷாக் ஆன காவ்யா “ஆமாம்” என அழுது கொண்டே கூற அதற்கு பார்த்தியின் அம்மா” நான் தான் தவறு செய்து விட்டேன். உனக்கு பிடிக்காமல் என் பையனை உனக்கு திருமணம் செய்து விட்டேன். அவனை விட்டு இனிமேல் பிரிவதற்கு முயற்சி செய். அவனை வெறுப்பது போல் காட்டிக்கொள்” என கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவ்யா, தனது அறையில் கதறி அழுதார். அப்போது உள்ளே வந்த பார்த்தி “எதற்காக அழுகிறாய்?” என கேட்க, அதற்கு காவ்யா “என்னை தனியே விடுங்கள்” என கோபமாக கூறினார். இதனை கேட்டு பார்த்திபன் மனம் உடைந்து விட்டார்.

காவ்யா தனது இன்னொரு மகனான ஜீவாவை தான் காதலித்தார் என்ற விவரம் அம்மாவுக்கு தெரிய வந்தால் என்ன ஆகுமோ? என்ற தவிப்பில் இருக்கிறார் காவ்யா. இந்த தொடரில் இனி என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top