TELEVISION
“பாக்கியா இந்த வீட்டு சமையல்காரி தான்…” அவசரப்பட்டு வாய் விட்ட கோபி
பாக்கியா இந்த வீட்டு சமையல்காரி தான் என அவசரப்பட்டு வாய் விட்டுள்ளார் கோபி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா-கோபியின் உறவை பற்றி அறிந்த பாக்கியா கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பத்தினர் பல முறை அழைத்து வீட்டிற்கு வராத பாக்கியா திடீரென வீட்டிற்கு வந்தார்.
பாக்கியா “கோர்ட்டுக்கு போகலாம்” என கோபியை அழைத்த போது குடும்பமே அதிர்ச்சியானது. அதன் பின் கோபியும் பாக்கியாவும் தனது மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு போயினர்.
அங்கே நீதிபதி அவர்களிடம் “கவுன்சிலிங் செல்கிறீர்களா?” என கேட்டார். அதற்கு பாக்கியா “இல்லை மேடம், அவர் கேட்டபடி நான் டைவர்ஸ் கொடுக்கிறேன்” என கூறினார்.
அதற்கு நீதிபதி “ஆண்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். நீங்கள் நன்றாக யோசித்து தான் முடிவெடுத்துள்ளீர்களா?” என பாக்கியாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பாக்கியா “என்ன தான் கணவன் மனைவி உறவாக இருந்தாலும் ஒருவரை அண்டி பிழைப்பது மிகப்பெரிய அவமானம். தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் உள்ள யாராக இருந்தாலும் இங்கே பிழைப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது” என கூறினார்.
பாக்கியலட்சுமியின் வாதங்களை கேட்ட நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்க உத்தரவிட்டார். இதனிடையே கோபி பாக்கியாவிடம் எரிமலையாய் அனலை கக்கினார். “வெளியுலகத்தை பற்றி ஒன்றுமே தெரியாத மரமண்டையுடன் இவ்வளவு வருடம் குடும்பம் நடத்திய என்னை விட பெரிய ஏமாளி வேறு யார் இருக்க முடியும்” என தேவையில்லாமல் வாய்விட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி பாக்கியலட்சுமியை “வீட்டை விட்டு வெளியே போ” என கத்தினார். மேலும் “என்றைக்கு இவள் நீதிமன்றப் படி ஏறி டைவர்ஸ் கேட்டு வாங்கினாளோ அன்றிலிருந்து இவளுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை” என கூறினார்.
மேலும் “இந்த வீட்டில் நீ ஒரு சமையல்காரியாகத்தான் இருந்தாய்” என தேவையில்லாமல் வாய்விட்டார். இதனை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் திகைத்துப் போயினர். விறுவிறுப்பாக செல்லும் “பாக்கியலட்சுமி” தொடர் தற்போது தான் சூடு பிடித்துள்ளது.