CINEMA
விஜய் சேதுபதி நடிக்கும் “மௌனப் படம்”,, நியூ அப்டேட்
நடிகர் விஜய் சேதுபதி வசனங்களே இல்லாத மௌனப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து பல படங்கள் கைவசம் உள்ளது. சமீபத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி மௌனப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்திற்கு “காந்தி டாக்ஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை கிஷோர் பாண்டுரங் பெலெகார் இயக்கவுள்ளார். இவர் மராத்தி மொழியில் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
“காந்தி டாக்ஸ் திரைப்படம் முதலாளித்துவம், இனவாதம், சமூகம் ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்கின்ற டார்க் ஹ்யூமர் வகையறா திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை ஹிந்து மத புராணம் ஒன்றை தழுவி எழுதப்பட்டுள்ளது” என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் “காந்தி டாக்ஸ்” குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் கிஷோர் “இத்திரைப்படம் சமூகத்திற்கு நல்ல பாசிட்டிவான கருத்தை கூறும். அனேக சந்தர்பங்களில் வார்த்தைகளை விட மௌனம் தான் அதிகம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதனை இப்படம் உறுதியாக நிகழ்த்தி காட்டும். அதே போல் இச்சமூகத்தின் முறிவுகளையும் கோடிட்டு காட்டும்” என கூறியுள்ளர்.
அதே போல் இத்திரைப்படத்தை குறித்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த ஷாரிக் படேல் “தயாரிப்பு நிறுவனம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் கதைகளை நம்புகிறது. காந்தி டாக்ஸ் அப்படிப்பட்டதாக இருக்கும் “ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)