CINEMA
கல்யாணம் முடிந்த கையோடு ஜோடியாக ஊர் சுற்ற கிளம்பிய ரவீந்தர்-மஹாலட்சுமி தம்பதியினர்..
ரவீந்தர்-மஹாலட்சுமி தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு தற்போது ஊர் சுற்ற கிளம்பியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
லிப்ரா புரொடக்சன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகரனை பலருக்கும் தெரிந்திருக்கும். “சுட்டக்கதை”, “நட்புன்னா என்ன தெரியுமா?”, “முருங்கக்காய் சிப்ஸ்” போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவர் பிரபல யூட்யூப் வலைத்தளம் ஒன்றில் பிக் பாஸ் ரிவ்யூ அளித்து வந்தார். அது பலருக்கும் ரீச் ஆனது. அதன் மூலம் தான் இவர் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.
தன் மனதில் பட்டத்தை Bold ஆக சொல்லும் பழக்கம் உள்ளதால் இவருக்கு பல நெகட்டிவிட்டிகள் வந்து சேர்ந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “என்ஜாய் பண்ணு லைஃப், Soon will be with my wife” என குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ரவீந்தர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என தெரியவந்தது. எனினும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் திடீரென தனது திருமண புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை நம்மால் மறந்திருக்க முடியாது. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்த போதே பலரையும் கவர்ந்தவர் மகாலட்சுமி. அவர் “அரசி”, “வாணி ராணி”, “பொண்ணுக்கு தங்க மனசு” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகரனும் மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது திருமணம் முடிந்த கையோடு இருவரும் சேர்ந்து ஜாலியாக மஹாபலிபுரம் சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை மஹாலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “வாழ்க்கை மிகவும் அழகானது. அது உன்னால் தான் அழகானது புருஷா” என ரவீந்தர் சந்திரசேகரனை குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram