CINEMA
கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற விவகாரம்; மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரம் ஷெராடான் பார்க் ரிசார்ட்டில் நடைபெற்றது. அவர்களின் திருமண விழாவில் ரஜினிகாந்த், அஜித், மோகன் ராஜா, ஐசரி கணேஷ், தொகுப்பாளினி டிடி, ஷாருக் கான் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இத்திருமண நிகழ்வை கௌதம் வாசுதேவ் மேனன் நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கி உள்ளார்.
இதனை தொடர்ந்து கல்யாணம் முடிந்த கையோடு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தம்பதியர் இருவரும் தரிசனம் செய்தனர். அதன் பின் மாட வீதியில் ஃபோட்டோ ஷூட் நடத்தினர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா, மற்றும் அவர்களது புகைப்படக்காரர்கள் அனைவரும் காலணி அணிந்திருந்ததாக விவகாரம் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்களது திருமணம் திருப்பதியில் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் மகாபலிபுரத்தில் நடைபெற்றது, ஆதலால் திருமணம் முடிந்த கையோடு வீட்டிற்கு கூட செல்லாமல் திருப்பதி எழுமலையானை தரிசிக்க இருவரும் புறப்பட்டு வந்துவிட்டதாகவும் இந்த நாள் நினைவில் இருக்கும்படி ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கோவில் வளாகத்தில் மக்கள் கூட்டம் குழப்பம் காரணமாக வளாகத்தை விட்டு வெளியேறி மீண்டும் உள்ளே வந்து ஃபோட்டோ எடுக்கும் போது அவசரத்தில் செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை எனவும் தாங்கள் இருவரும் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், கடந்த 30 நாட்களில் 5 முறை திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளதாகவும், செருப்பு அணிந்து சென்றது குறித்து தங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)