CINEMA
சிறுத்தை சிவா-சூர்யா கூட்டணியின் மாஸ் அப்டேட்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிறுத்தை சிவா-சூர்யா இணையும் புதிய திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. “அண்ணாத்த” திரைப்படம் பொருளாதார வெற்றியை பெற்றாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன.
இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் அத்திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும் வதந்தி பரவியது.
எனினும் அத்திரைப்படம் ட்ராப் ஆகவில்லை எனவும், அத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க சிறுத்தை சிவா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகன் என்ற இரு வேடங்களிலும் சூர்யாவே நடிக்க உள்ளதாக வியூகிக்கப்படுகிறது.
ஆக்சன் படங்களை கையாள்வதில் சிவா கெட்டிக்காரர். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சென்டிமென்ட்டோடு ஆக்சனும் கலந்திருக்கும் என அறியப்படுகிறது.
சூர்யா சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றன. எனினும் அதற்கடுத்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” என்ற கேமியோ ரோலில் நடித்தார். அது வேற லெவல் ரெஸ்பான்ஸை அள்ளியது. தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.