Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பெரியாரை குறித்து வாய் விட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தலைமறைவு??

CINEMA

பெரியாரை குறித்து வாய் விட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தலைமறைவு??

பெரியார் சிலை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாக இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் கனல் கண்ணன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல  முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார். மேலும் பல பிரபல ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

கனல் கண்ணன் தமிழ் மொழியில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார்.

கனல் கண்ணன் தற்போது இந்து முன்னணி அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை மதுரவாயிலில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் “ஸ்ரீரங்கம் கோயிலில் பல லட்சம் இந்துக்கள் தரிசனம் செய்கிறார்கள். அவர்கள் வெளியே வரும்போது பெரியார் சிலை இருக்கிறது. என்றைக்கு அந்த சிலை உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என பேசினார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் இணையத்தில் கனல் கண்ணனின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

கனல் கண்ணனின் இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பின் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் கனல் கண்ணன் கைது செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கனல் கண்ணன் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top