CINEMA
“அது என்னை கொல்லப் பார்த்தது ஆனால்?”.. அதிர்ச்சி கிளப்பிய பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர் தனது கம்போடியா பயணத்தை குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித் திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர் இக்காலத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
“மேயாத மான்” திரைப்படத்தில் இருந்து தொடங்கிய இவரது திரை பயணம் தற்போது வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. தமிழின் முன்னணி நடிகையாக தற்போது மாறி வருகிறார். கியூட் கேர்ள் என்ற நிலையை தாண்டி தற்போது தனக்கென ஒரு தனித்துவமான ரூட்டை பிடித்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் நடிக்கும் போதே அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. தற்போது சினிமாவுக்கு வந்த பிறகு அவரது ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகையான பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சியை கிளப்பும் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு அவரது நண்பருடன் சென்ற கம்போடியா பயணத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “நான் எமோஷனலாக இருந்தேன். அன்று காலை எழுந்தவுடன் எங்காவது ஓடிப்போக வேண்டும் என தோன்றியது. அன்று மாலையே நாங்கள் எந்த திட்டமிடலும் இன்றி விமானத்தில் ஏறிவிட்டோம்.
திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு பயந்திருக்கிறேன் என உணர்ந்து விட்டேன். அது என்னை கொன்று விடுமோ என நினைத்தேன். ஆனால் இல்லை. நான் உயிருடன் தான் இருந்தேன். ஆதலால் நீங்கள் யாராவது கஷ்டமான காலங்களில் இருந்தால் உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது தான். எதுவும் முடிவு அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)