CINEMA
“யாருப்பா அந்த மூன்றெழுத்து பிரபலம்?”… பார்த்திபனின் டிவிட்டால் ஏற்பட்ட குழப்பம்
அந்த மூன்றேழுத்து நடிகர் தன்னுடைய படத்தை குறித்து அப்டேட் வெளியிடப் போகிறார் என பார்த்திபன் அறிவித்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ‘இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். அத்திரைப்படம் உலகின் முதல் Non-Linear Single shot திரைப்படமாக உருவாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் கூட “இரவின் நிழல்” திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
“இரவின் நிழல்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தனித்துவமாக இருக்கிறது என பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இத்திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ஏ. ஆர். ரகுமான் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பார்த்திபன், “என்னை எதை நம்பி இத்திரைப்படத்தை இயக்கினாய் என கேட்டார்கள். அதற்கு நான் ஏ. ஆர். ரகுமானை நம்பி தான் இயக்கினேன்” என அவர்களுக்கு பதில் அளித்ததாக கூறினார்.
எப்போதுமே வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன், தற்போது தான் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை வெளியிடுவதற்கும் வித்தியாசமாக யோசித்துள்ளார். அதாவது “இரவின் நிழல்” திரைப்படத்தை அந்த மூன்று எழுத்து நடிகர் தான் வெளியிடப் போகிறார் என கிசு கிசு செய்தி போல் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பகிர்ந்த டிவிட்டில் “மாலை 6 மணிக்கு இரவின் நிழல் வெளியீட்டு தேதியை ஒரு பிரபலம் வெளியிடுகிறார். அப்பிரபலம் என்ற வார்த்தையில் உள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும். எனில் அந்த திரு. யார்? முன்கூட்டியே அம்பலப்படுத்துவோருக்கு சபாஷ்!!” என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் “இதை விட ஒருத்தருக்கு Clue கொடுக்க முடியாது” எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் யார் அந்த மூன்றெழுத்து நடிகர் என குழப்பத்தில் உள்ளனர்.
Guess who?#Iravinnizhal #இரவின்நிழல்
@arrahman @rparthiepan@iravin_nizhal @musiconDhwani@theVcreations @ArthurWisonA @varusarath5 @GenauRanjith @RVijaimurugan @k33rthana @raakiparthepan @wired__ @Brigidasaga22 @iamrobosankar @onlynikil @divomovies @MirchiTamil983 pic.twitter.com/pAxOt5lJ2P— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 26, 2022