CINEMA
பா ரஞ்சித்தின் கலர்ஃபுல் காதல் கதை.. அம்சமான டிரைலர்..
பா ரஞ்சித்தின் கலர்ஃபுல் காதல் திரைப்படமாக வெளியாக உள்ள “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் கலர்ஃபுல் டிரைலர் வெளிவந்துள்ளது.
பா ரஞ்சித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் வகையில் தான் அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பா ரஞ்சித் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் “அட்டக்கத்தி” திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு கலர்ஃபுல் காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
காதலுக்கு மதம் இல்லை, ஜாதி இல்லை, பாலினம் இல்லை என்ற நவீன கருத்தாக்கத்தை மையமாக கொண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். இதில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துசாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ராபர்ட் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
எப்போதும் பா ரஞ்சித் திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். ஆனால் இத்திரைப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் கலர்ஃபுல் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் காதலின் பல பரிணாமங்களை பா ரஞ்சித் காட்டியுள்ளதாக தெரியவருகிறது. “ஆணும் பெண்ணும் தான் காதலிக்கனுமா? ஒரு பெண்ணும் பெண்ணும் ஆணும் ஆணும் காதலிக்கக்கூடாதா?” என்ற வசனத்தின் மூலம் இத்திரைப்படம் ஒரு Bold ஆன கதையை தாங்கியுள்ளதாக தெரியவருகிறது. “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் ஆகஸ்து 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பா ரஞ்சித் இத்திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படம் கோலார் தங்கவயலில் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் திரைப்படம் என தகவல் வெளிவருகிறது.