CINEMA
“என்றும் உன்னை விட்டு பிரிய மாட்டேன்”.. நயன்தாராவிற்கு சிம்பாளிக்காக உணர்த்திய விக்னேஷ் சிவன்..
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றித் திரியும் பல கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வைபவ வீடியோ விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஹனி மூனுக்கு கிளம்பினர். அங்கே பல ரொமான்ட்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். அதன் பின் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர்களின் பணியில் பிசியானார்கள். தற்போது இருவரும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்க முடிவு செய்து வேறு நாட்டிற்கு பறந்துள்ளனர்.
அதாவது ஸ்பெயின் நாட்டிற்கு தற்போது இருவரும் ஜோடியாக பறந்துள்ளனர். விமானத்தில் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதில் “தொடர்ந்து பல வேலைகளுக்கு பின் இருவரும் எங்களுக்கான நேரத்தை செலவிட புறப்பட்டுவிட்டோம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் பெர்சிலோனாவில் இருவரும் காதல் ஜோடிகளாக உல்லாசமாக திரியும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். தற்போது பெர்சிலோனாவின் தெருக்களில் இருவரும் ஜோடியாக திரியும் பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
இதில் இருவரும் காதல் பறவைகள் போல் உல்லாசமாக திரிகிறார்கள். பார்க்கவே கண்கொள்ள காட்சியாக இருக்கிறது. இருவரும் மின் விளக்கு ஒளியில் ஜொலிக்கிறார்கள். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
