CINEMA
நயன்தாராவிடமே வேலையை காட்டிய விக்னேஷ் சிவன்….? சேட்டைய பாருங்க..
நயன்தாரா புகைப்படம் எடுக்கையில் எதிர்பாரா விதமாக விக்னேஷ் சிவன் செய்த சேட்டைய பாருங்க.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் Live in உறவில் இருந்த போது இருவரும் இணைந்து பல நாடுகளுக்கு Dating சென்று வந்தனர்.
இருவரும் திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். இவர்கள் இப்படியே Live in உறவிலேயே இருந்துவிடப் போகிறார்கள் என சில பேச்சுக்களும் அடிப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இதனை கொண்டு இருவரும் திருமணம் செய்வது உறுதி என தெரியவந்தது.
ஆனாலும் அதன் பின்பு திருமணம் குறித்து மௌனமாகவே இருந்தனர். அதன் பின் இருவரும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் உடனே திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்கள் அங்கே தான் திருமணம் செய்யப்போவதாக இருந்தது. சில காரணங்களால் மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். சில நாட்களாக அங்கே இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை புகைப்படம் எடுத்த வேளையில் விக்னேஷ் சிவன் செய்த சேட்டை வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவனை புகைப்படம் எடுக்கும் போது அவர் நயன்தாராவை புகைப்படம் எடுத்திருக்கிறார்.
விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படத்தில் நயன்தாரா கைகளில் மொபைலுடன் புகைப்படம் எடுத்தவாறு இருக்கிறார். இப்புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் கிளாமராக இருக்கிறார். இந்நிலையில் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
