CINEMA
மணி ரத்னத்திற்கு வந்தது கொரோனா இல்லையாம்… அப்போ?
மணி ரத்னத்திற்கு கொரோனா தொற்று என கூறி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கோ?
மணி ரத்னம் இன்று காலை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வந்தன. அவருக்கு இன்று காலை அதிக காய்ச்சல் ஏற்பட்டிருந்ததால் கொரோனா தொற்றாக இருக்கும் என சந்தேகப்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்களாம்.
ஆனால் தற்போதோ அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் பரிசோதனையின் முடிவில் கூறிவிட்டார்களாம். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் குறித்தான விவாதங்கள் தற்போது எழுந்து வருகிறது. சோழர் வரலாற்றை குறித்து இணையத்தில் பலரும் கலந்துரையாடி வருகிறார்கள்.
கடந்த 50 வருடங்களாக “பொன்னியின் செல்வன்” நாவல் தமிழின் டாப் மோஸ்ட் நாவலாக இருந்தாலும் , தற்போது மணி ரத்னம் கைவைத்துள்ளதால் அது வேற லெவலில் ரீச் ஆகி வருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
சீயான் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். கார்த்தி வந்தியதேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும் வருகின்றனர். மேலும் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும் ஜெயராம் ஆழ்வார்கடியான் நம்பியாகவும் வருகின்றனர்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை பலரும் எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கும் நிலையில் இன்று காலை மணி ரத்னத்திற்கு கொரோனா என செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)