CINEMA
உதயநிதியிடம் கோரிக்கை வைத்த “இந்தியன் 2” தயாரிப்பாளர்.. ? என்ன விஷயம் தெரியுமா?
“இந்தியன் 2” திரைப்படத்தின் சேட்டலைட் உரிமத்தை ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்திற்கான பேட்டி ஒன்றில் கமல் ஹாசனிடம் “இந்தியன் 2 மீண்டும் தொடங்குமா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல் ஹாசன் “ஷங்கர் தெலுங்கு திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். அதன் பிறகு இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளோம்” என கூறினார்.
மேலும் அதன் பின் “டான்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “லைக்கா நிறுவனத்திடம் சமீபத்தில் பேசினேன். இந்தியன் 2 விரைவில் தொடங்க உள்ளோம்” என்று கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளினார்.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் “இந்தியன் 2” திரைப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலினை முதலீடு செய்ய வருமாறு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை கலைஞர் டிவிக்கு சேட்டிலைட் உரிமத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக உதயநிதியை முதலீடு செய்ய கேட்டுள்ளதாம். மேலும் “இந்தியன் 2” திரைப்படத்தையும் கலைஞர் டிவிக்கும் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)