CINEMA
“கமல்-ரஞ்சித்” கூட்டணி ரெடி?… ரசிகர்கள் உற்சாகம்
“விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ரஞ்சித் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான “விக்ரம்”திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது சூர்யா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார் என சர்ப்ரைஸை உடைத்து விட்டார். இதனை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் “விக்ரம்” திரைப்படம் குறித்து பேசினார்.
அப்போது அவர்” எனக்கு கமல்ஹாசனை வைத்து இயக்க வேண்டும் என வெகு நாள் ஆசை. எனக்கு விருமாண்டி திரைப்படம் மிகவும் பிடிக்கும். விரைவில் அத்திரைப்படம் போல் மதுரையை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்” என கூறினார்.
பா. ரஞ்சித் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மையமாக வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக அவர் இயற்றிய “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” , “சார்பட்டா பரம்பரை” போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டன. இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”, “ரைட்டர்” ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன், பா. ரஞ்சித் இருவரின் சந்திப்பு நடந்தது. அவர்கள் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அப்போதே பா. ரஞ்சித் கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் பா. ரஞ்சித் நேற்று “விக்ரம்” திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறியது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.