Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததா??

CINEMA

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததா??

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால்??

“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை.

ஆதலால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சனை கேலி செய்து பல மீம்களை இறக்கி வந்தனர்.

“பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே அதிகம் வந்ததால் ரஜினி நெல்சன் திரைப்படத்தில் இருந்து விலகி விடுவார் என வதந்தி பரவியது. ஆனால் ரஜினி-நெல்சன் கூட்டணி கன்ஃபார்ம் ஆனது.

இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் Pre-production பணிகள் தொடங்கின. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர்  நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.

அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்தது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்து மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இத்திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் முடிந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. ரஜினி கதாப்பாத்திரத்தின் லுக் டெஸ்ட்டும் நடந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top