CINEMA
இன்று 11 மணிக்கு ஒரு சிறப்பான தரமான சம்பவம் இருக்கு..
இன்று காலை 11 மணிக்கு “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளிவர உள்ளது.
“ஜெயிலர்” திரைப்படத்தின் Pre production பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாகவும் கூட கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளிவர உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது.
நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம் சிறப்பான திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜெயிலர்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளிவர உள்ளது. இது படப்பிடிப்பு குறித்த அப்டேட்டாக இருக்குமா? அல்லது படம் வெளியீடு குறித்த அப்டேட்டாக இருக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)