Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பார்லிமென்ட்டில் பேசிய இளையராஜா… தமிழர்களுக்கு சேர்ந்த கூடுதல் பெருமை..

CINEMA

பார்லிமென்ட்டில் பேசிய இளையராஜா… தமிழர்களுக்கு சேர்ந்த கூடுதல் பெருமை..

இசைஞானி இளையராஜா பாராளுமன்றத்தில் நேற்று எம் பி ஆக பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் இளையராஜா. மூன்று தலைமுறையை கடந்தும் இவரது பாடல்கள் நிலைக்க கூடியவை. அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்திருக்கிறது இவரது இசை. தனது 79 வயதிலும் இவரது இசையில் இளமையான ராகங்கள் அப்படியே உள்ளது.

இசைஞானி இளையராஜா தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த இசையமைப்பாளர். அவரின் பாடல்கள் காலத்துக்கும் அழியாதவை. மூன்று தலைமுறைகளாக ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர்.

சமீபத்தில் வெளியான “அம்பேத்கர் அண்டு மோடி” என்ற ஆங்கில புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து எழுதினார். இதனால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து தான் இளையராஜா ராஜ்யசபாவின் நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்ட செய்தியும் வந்தது. இதனால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி ஆடினர்.

இந்நிலையில் இளையராஜா நேற்று பாராளுமன்றத்தில் ராஜ்ய சபாவின் நியமன எம் பி ஆக பதவி ஏற்றுக்கொண்டார். அந்நிகழ்வை தொடர்ந்து இளையராஜா “கடவுளின் பெயரால்” பதவி ஏற்பு உறுதிமொழியை கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.

இளையராஜா ராஜ்ய சபா எம் பி ஆக பதவி ஏற்றது ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது. மேலும் பலரும் இளையராஜாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிகத்தில் தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்ற சாதாரண கிராமத்தில் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து இசை உலகில் பல சாதனைகள் புரிந்து தற்போது ராஜ்ய சபா எம் பி ஆகியிருக்கும் இளையராஜா தமிழர்களுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top