Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அந்த முருகதாஸ் படம் என்னுடைய கதை தான்”… பகீர் கிளப்பிய இயக்குனர்

CINEMA

“அந்த முருகதாஸ் படம் என்னுடைய கதை தான்”… பகீர் கிளப்பிய இயக்குனர்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய அந்த திரைப்படம் தன்னுடைய கதை தான் என கூறி பகீர் கிளப்பியுள்ளார் “தென்னவன்” இயக்குனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ரமணா”.  இத்திரைப்படம் விஜயகாந்த் திரைப்பட பயணத்தில் முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மன்னிப்பு , தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை” என்ற வசனத்தை நம்மால் மறக்க முடியாது. இப்போதும் அந்த வசனம் மிகவும் பிரபலமான வசனம் ஆகும்.

இந்நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது விஜயகாந்த் நடிப்பில்  கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “தென்னவன்” திரைப்படத்தின் இயக்குனர் நந்தகுமார் சில மாதங்களுக்கு முன் ஒரு பிரபல சேன்னலுக்கு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் “ரமணா திரைப்படத்தின் கதையை 1999 ஆம் ஆண்டு ஆசான் என்ற பெயரில் எழுதினேன். அந்த கதையை ரிஜிஸ்டர் செய்தும் வைத்தேன். ஆனால் அந்த கதை எப்படியோ என்னுடைய நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் ஏ ஆர் முருகதாஸுக்கு சென்று விட்டது

அவர் ரமணா என்ற பெயரில் அந்த கதையை திரைப்படமாக எடுக்க தொடங்கிவிட்டார் என்பதே எனக்கு தெரியாது” என கூறியுள்ளார்.

மேலும் அவர்  “இந்த பிரச்சனையை குறித்து அப்போது எழுத்தாளர்கள் சங்கத்தில் நீதி கிடைக்கவில்லை. ஆனால் அதன் பின் விஜயகாந்த் என்னை அழைத்து ஒரு கதை சொல்லுமாறு கூறினார். நான் ஒரு கதை கூறினேன். அது தான் பின்னால் தென்னவன் திரைப்படமாக வெளிவந்தது” என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இந்த பேட்டி மீண்டும் வைரல் ஆகி வருவதால் நெட்டிசன்களிடம் இது விவாத பொருளாக மீண்டும் உருவாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top