CINEMA
விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.. நீதிமன்றம் அதிரடி
விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏன் தெரியுமா?
நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியனிடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் இந்த கடனை லைக்கா நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது விஷால் இந்த பணத்தை திருப்பி கொடுக்கும் வரையில் விஷால் ஃபிலில் ஃபேக்டரி தயாரிக்கும் படங்கள் அனைத்திற்குமான உரிமையை லைக்காவுக்கு வழங்கவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.
எனினும் விஷால் நடித்து தயாரித்த “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை விஷால் பணத்தை திருப்பி தராமல் அவரே வெளியிட முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை வெளியிடவும் அதன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை தொடர்ந்து நடந்த விசாரணையில் விஷால் கொடுக்க வேண்டிய பணத்தில் ரூ. 15 கோடியை சென்னை உயர்நீதிமன்றத்தின் வைப்பீடாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் விஷால் வைப்பு தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு வந்தது.
இந்த நிலையில் இது குறித்தான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று ஆஜரான விஷால் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் மேல்முறையீட்டிற்குச் சென்றதனால் தான் பணத்தை செலுத்தவில்லை எனவும் ரூ. 18 கோடி நஷ்டம் ஆனதால் 6 மாதம் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது எனவும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)