CINEMA
மீண்டும் இணையும் “கோப்ரா” கூட்டணி.. மாஸ் தகவல்..
“கோப்ரா” திரைப்படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சீயான் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இது சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படமாகும். கோலார் தங்க வயலில் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது சீயான் விக்ரமின் 62 ஆவது திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது சீயான் விக்ரம் தனது 62 ஆவது திரைப்படத்தில் மீண்டும் “கோப்ரா” இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணைய உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகிறது. எனினும் இது குறித்த உண்மைத் தன்மை தெரியவில்ல்லை.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இதில் “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கி உள்ளார். இதில் விக்ரமுடன் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)