Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..

CINEMA

இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..

இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

தமிழின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி “ஆனந்தம்”, “ரன்”, “சண்டகோழி”, “பையா”, “வேட்டை”, “அஞ்சான்” என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட “தி வாரியர்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் படு தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி “எண்ணி ஏழு நாள்” என்ற திரைப்படத்தை எடுப்பதற்காக பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.03 கோடியை கடனாக வாங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்தி, சமந்தா ஆகியோர் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பிவிபி கேப்பிட்டல் நிறுவனம், இயக்குனர் லிங்குசாமியிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளது. அதற்கு லிங்குசாமி ஒரு பேங்க் செக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த பேங்க் செக் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிவிபி நிறுவனம் இயக்குனர் லிங்குசாமி மீது வழக்கு தொடுத்தது. இந்த செக் மோசடி வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி தரப்பு மேல் முறையீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top