Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கண்ணம்மாவின் கள்ள பார்வை: இளசுகளை திணறவைக்கும் ரோஷினி

GALLERY

கண்ணம்மாவின் கள்ள பார்வை: இளசுகளை திணறவைக்கும் ரோஷினி

சின்னத்திரை நடிகை ரோஷினி ஹரிப்பிரியனின் கிளர்ச்சி ஊட்டும் கள்ள பார்வையில் பல புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” தொடர் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் ரோஷினி. “பாரதி கண்ணம்மா” தொடரில் இரு குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், அதே நேரத்தில் தன் மானத்துக்கு பங்கம் விளைந்த போது சீறும் பெண் சிங்கம் போன்ற கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திருந்தார்.

“பாரதி கண்ணம்மா” தொடரில் எப்போதும் ஹோம்லி லுக்கில் பார்த்து பழகிப்போன நமக்கு அவரது சமூக வலைத்தளப் பக்கம் பெரிதும் ஆச்சரியத்தை கொடுத்தது. நமது கண்ணம்மாவா இது என வாயில் கை வைக்கும் அளவுக்கு மாடல் புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு வந்தார். கண்ணம்மாவின் இந்த இரு பக்கங்களையும் ரசித்து கொண்டிருந்த வேளையில் திடீரென “பாரதி கண்ணம்மா” தொடரில் இருந்து விலகினார்.

இளைஞர்கள் ஸ்தம்பித்து போனார்கள். “பாரதி கண்ணம்மா” தொடரை ரோஷினிக்காகவே தினமும் பார்த்த இளைஞர்கள் பலர். அவர் திடீரென அத்தொடரில் இருந்து வெளிவந்தவுடன் இளைஞர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து திடீரென அதிர்ச்சியூட்டும் வகையில் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் புகுந்தார். கண்ணம்மா தொடரில் பார்த்த இவரை வேறு கோணத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதனை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ரோஷினி எலிமினேட் ஆகும் கட்டம் வரைக்கும் சென்று தப்பினார். அப்போது நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகள் குக்குகள் என அனைவரும் கண்ணீர் கோலமாக காட்சி தந்தனர்.

இந்நிலையில் ரோஷினி சமூக வலைத்தளத்தில்  உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதமாக பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top