GALLERY
அப்படி பாக்காதீங்க பிரியங்கா, ப்ளீஸ்….
“அழகுக்கு மறுபெயர் நான் தான்” என்பது போல் பல Stunning புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.
“டாக்டர்” திரைப்படம் மூலம் “மெலுகு டால்” ஆக இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டு போனவர் பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்தார். அதில் “சும்மா சுர்ர்” ன்னு பாடலில் சும்மா சுர்ருன்னு என்று சொல்லும் போது நமது இதயமே சுர்ர்ரென இழுத்தது.
அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படத்தில் நடித்தார். அதில் கல்லூரி மாணவியாக க்யூட்டாக வந்து நமது மனதை கொக்கி போட்டு இழுத்து கொண்டு போனார். அவரின் சிரிப்பும் கொஞ்சலான பேச்சும் மனதை பரவசப்படுத்தியது.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் “தலைவா 169” திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக அறியப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்ற பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடை அழகை காட்டி இளைஞர்களை உசுப்பேத்தி வம்பிழுத்து வந்தார்.
அதனை தொடர்ந்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்போது “அழகுக்கு மறுபெயர் நான் தான்” என்பது போல் சில Stunning புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் எழில் கொஞ்சும் அழகுடன் தெறிக்கவிடும் வகையில் ஆடையணிந்து பிரியங்கா மோகன் பார்க்கவே பளபளப்பாக இருக்கிறார்.
தற்போது தமிழக இளைஞர்களுக்கு கனவுக் கன்னி ஆகிவிட்டார் பிரியங்கா மோகன். அந்த அளவுக்கு தனது க்யூட் நடிப்பால் பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிட்டார். இந்த நிலையில் தான் இப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் மனசை திணறடித்து வருகிறார்.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)