CINEMA
“விக்ரம்” தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு வசூலா?
“விக்ரம்” திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் எவ்வளவு கோடி கல்லா கட்டியிருக்கிறது என பாருங்கள்.
“விக்ரம்” திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் நிறைந்து வழிகிறது. பல திரையரங்குகளில் 24 மணி நேர ஸ்பெஷல் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு முன் வெளிவந்த கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் திரைப்படங்களையும் வீழ்த்தி சாதனை படைத்து வருகிறது ‘விக்ரம்”.
இதனிடையே “விக்ரம்” திரைப்படக்குழு மாபெரும் வெற்றியை தொடர்ந்து “ALL TIME RECORD” புரோமோ ஒன்றை வெளியிட்டனர். “விக்ரம்” திரைப்படத்தில் கமல் ஹாசனை பின்னால் இருந்து ஒருவர் அவரது கால் நரம்பை வெட்ட வரும்போது, அவரால் வெட்ட முடியாது. அப்போது கமல் அவரை பார்த்து ஒரு கதை சொல்வார். “ஒரு ஊர்ல சண்டைக்கு போயிருந்தப்போ எழும்பு உடஞ்சி ராடு வச்சிருக்கிறாங்க. வெட்ட முடியாது” என வசனம் பேசிவிட்டு அவரை தன் காலால் மிதிப்பார்.
திரைப்படத்தில் பார்வையாளர்கள் பெரிதும் ரசித்து பார்த்த காட்சிகளில் இதுவும் ஒன்று. இந்த காட்சியை “ALL TIME RECORD” காட்சியாக வெளியிட்டனர். “விக்ரம்” திரைப்படம் வெளியாகி இரண்டே வாரங்களே ஆன நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 350 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது “விக்ரம்” திரைப்படம் தமிழ்நாட்டில் செய்த வசூல் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “விக்ரம்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 150 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, அனிருத், உதயநிதி ஸ்டாலின் என பலருக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முத்தங்களை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
