CINEMA
“பாட்ஷாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி”.. வெறித்தனம்!!
பாலிவுட் பாட்ஷாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தனது இயக்குனர் கேரியரை தொடங்கினார்.
காதலும் சென்டிமென்ட்டும் கலந்து உருவான “ராஜா ராணி” பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு அட்லிக்கு ஏறுமுகம் தான்.
தளபதி விஜய்யை வைத்து இயக்கிய “தெறி” வெறித்தனமாக ஹிட் ஆனது. அத்திரைப்படத்தின் மூலம் அட்லி மாஸ் ஹீரோக்களின் டைரக்டர் என்ற முத்திரையை பதித்தார்.
அதன் பின் விஜய்யை வைத்து மீண்டும் இயக்க “மெர்சல்” மூலம் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இத்திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி வைத்தார். அந்த திரைப்படமும் தாறு மாறு ஹிட் ஆக, அதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“பிகில்” திரைப்படத்தில் மீண்டும் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி. பாடல்கள் அனைத்தும் தாறு மாறு ஹிட். படம் விஜய்க்கு ஏற்ற பக்கா மாஸ் கமெர்சியல் திரைப்படமாக அமைந்தது.
இவ்வாறு கோலிவுட்டில் தொட்டதெல்லாம் வெற்றி என்று அட்லிக்கு அமைந்த நிலையில் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இத்திரைப்படத்தில் நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வந்தது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஷாருக் கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
“ஜவான்” திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். “ஜவான்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
