CINEMA
விஜய் சொகுசு கார் வழக்கில் வெளிவந்த தீர்ப்பு என்ன தெரியுமா?
விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஒரு சொகுசு காரை வாங்கி இறக்குமதி செய்தார். அந்த காரின் மதிப்பு ரூ. 63 லட்சம். இந்நிலையில் விஜய் இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து விஜய் இறக்குமதி செய்த காருக்கு ரூ. 7 லட்சத்து 98 ஆயிரத்தி 75, நுழைவு வரியாக செலுத்தப்பட்டது. ஆனால் இந்த வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ. 30 லட்சத்து 23 ஆயிரத்தி 609 செலுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு வணிக வரித்துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் இருந்து “மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு தான் அபராதம் செலுத்த வேண்டும், ஆனால் இங்கு 400 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கு குறித்த தீர்ப்பு வெளிவந்துள்ளது. அந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் “விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது” என தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் அந்த தீர்ப்பில் “2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் முழுமையாக வரி செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
