CINEMA
அதிதி ஷங்கரால் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு வந்த சோதனை.. அந்த பாடலை முதலில் பாடியது இவர்தானாம்??
அதிதி ஷங்கர் பாடிய “மதுரை வீரன்” பாடலை பாடியது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் என ஒரு தகவல் பரவி வருகிறது.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். “விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் பரவலாக ரசிகர்களை கவர்ந்தது. இத்திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மதுரை வீரன்” என்ற பாடலை அதிதி ஷங்கர் தான் பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த பாடல் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது இந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் பாடினாராம். அதன் பின் அதிதி ஷங்கர் பாடுவதற்காக ராஜலட்சுமியின் குரல் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பலருக்கும் ஷாக்கான செய்தியாக அமைந்துள்ளது.
செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் சூப்பர் சிங்கர் மூலம் தமிழகமெங்கும் பிரபலமாக அறியப்பட்டவர்கள். “சார்லி சாப்ளின் 2” திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன மச்சான்” பாடலை இந்த தம்பதியினர் தான் பாடியிருந்தனர். மேலும் “விஸ்வாசம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “டங்கா டங்கா” பாடலையும் இத்தம்பதியினர் தான் பாடியிருந்தனர். அதே போல் ராஜலட்சுமி தான் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடலான “சாமி” பாடலையும் பாடியவர்.
கிராமத்து பாடல் என்று வந்தாலே இப்போதெல்லாம் ஞாபகம் வருவது ராஜலட்சுமியும் செந்தில் கணேசும் தான். அந்த அளவுக்கு அவர்களுடைய குரல்களால் மக்களை கட்டிப்போட்டு விட்டனர். இந்நிலையில் தான் ராஜலட்சுமியின் குரலை நீக்கி விட்டு அதிதி ஷங்கர் பாடியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)