CINEMA
ரஜினியே சொன்ன ஜெயிலர் அப்டேட்… மாஸ் தலைவா!
“ஜெயிலர்” திரைப்படம் குறித்து சுவாரசியமான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“ஜெயிலர்” திரைப்படத்தின் Pre production பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வந்தது. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாகவுக் கூட செய்திகள் வெளிவந்தது.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
அப்போது ரஜினியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்று கேட்டபோது “ஜெயிலர் தான்” என கூறினார். மேலும் “அரசியலுக்கு வருவீர்களா?” என கேட்டபோது “இல்லை” என பதில் கூறினார்.
இதன் மூலம் விரைவில் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற 15 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் ஒரு தகவல் வருகிறது. எனினும் கூடிய விரைவில் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.
நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை. இந்நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் சிறப்பான திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
