CINEMA
இணையத்தில் லீக் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்…
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “சோழா சோழா” பாடல் வெளியானது. அப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் தமிழின் மிக பிரபல நாவலான “பொன்னியின் செல்வன்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவலை அமரர் கல்கி எழுதியிருக்கிறார். இந்த நாவலை படமாக்க பலரும் முயன்றனர். ஆனால் தற்போது இதனை மணி ரத்னம் சாத்தியமாக்கிவிட்டார்.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்புகைப்படங்களை இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனே வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்புகைப்படங்கள் இதோ..
