CINEMA
அனிமேஷன் எல்லாம் கிடையாது.. நிஜமான விலங்குகளையே இறக்கப்போறேன்.. திகில் கிளப்பும் பார்த்திபன்..
அனிமேஷன் இல்லாமல் விலங்குகளை வைத்து மட்டுமே ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க உள்ளராம் பார்த்திபன்.
தமிழ் சினிமாவில் புதுமையாக சிந்திப்பவர் என்ற பெயரை பெற்றவர் பார்த்திபன். ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே வைத்து சமீபத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படத்தை பார்த்திபன் இயக்கினார். அதில் அவர் மட்டுமே நடித்திருப்பார். இத்திரைப்படத்தை பாலிவுட்டில் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கினார்.
அதனை தொடர்ந்து உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் விதமாக உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான “இரவின் நிழல்” திரைப்படத்தை இயக்கினார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “அசாத்திய சாதனையை செய்து தமிழ் சினிமாவிற்கு பார்த்திபன் பெருமை சேர்த்துள்ளார்” என ரசிகர்களும் சினிமாத் துறையினரும் பாராட்டி வருகின்றனர்.
“இரவின் நிழல்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பார்த்திபன் இத்திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளை தீயாக செய்திருந்தார். முதலில் இத்திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ ஆர் ரகுமானை கொண்டு உலகளவில் விளம்பரப்படுத்தினார். மேலும் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் புரோமோட் செய்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.
இந்நிலையில் தற்போது பார்த்திபனின் அடுத்த திரைப்படம் குறித்த ஒரு ஆச்சரியத்தக்க தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதாவது பார்த்திபன் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம். “ஒரு வேளை அனிமேஷன் திரைப்படமாக இருக்குமோ?” என்று ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பினர். ஆனால் அனிமேஷன் இல்லாமல் முழுக்க முழுக்க விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.