GALLERY
மீண்டும் மாலத்தீவில் மாளவிகா மோகனன்??
கடற்கரையோரத்தில்அமர்ந்திருக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் மாலத்தீவு சென்றுள்ளாரா? என ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
மலையாள திரைப்பட உலகின் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு “நிர்ணாயகம்” “தி கிரேட் ஃபாதர்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனிடையே கன்னடத்தில் “நானு மட்டு வரலக்ஷ்மி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் மஜிதி மஜிதி இயக்கத்தில் உருவான “பியாண்டு தி கிளவுட்ஸ்” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்தார்.
ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படத்தின் மூலமாக தான் தமிழுக்கு இவர் அறிமுகமானார். பிறகு விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம், தனுஷ் நடிப்பில் உருவான “மாறன்” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுகளுக்கு ஓய்வுக்காக சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
மாலத்தீவில் இருந்து கிளம்பினாலும் தனது கண்கவர் புகைப்படங்களால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள மாளவிகா தவறவில்லை. தொடர்ந்து மாடர்ன் உடைகளில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே இருந்தார்.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் இருந்தவாறு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மீண்டும் மாளவிகா மாலத்தீவிற்கு சென்றுள்ளாரா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சென்றனர். ஆனால் மாளவிகா மோகன் இத்தாலிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் கடற்கரையில் மகிழ்ச்சியாக உலாவும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. பல நாட்கள் கழித்து மாளவிகா மோகனன் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியாகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)