CINEMA
“இப்படி எல்லாம் தமிழ் கத்துக்க முடியுமா?” அதிர்ச்சி கிளப்பும் கிரீத்தி ஷெட்டி
கிரீத்தி ஷெட்டி தான் தமிழ் கற்றுக் கொண்டது குறித்து ஒரு அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார். என்ன தெரியுமா?
தென் இந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் கிரீத்தி ஷெட்டி. தெலுங்கில் வெளிவந்த முதல் திரைப்படமான “உப்பண்ணா” திரைப்படத்திலேயே தனது பார்வையால் கொக்கி போட்டு ரசிகர்களை தூக்கி தொங்கவிட்டு விட்டார்.
அதன் பின் நாக சைதன்யாவுடன் “பங்காரு ராஜு”, நானியுடன் “ஷ்யாம் சிங்கா ராய்” என டாப் ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் தற்போது பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. அதில் கிரீத்தி அணிந்திருக்கும் சிக்கென்ற உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனம் பார்வையாளர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி தமிழுக்கு என்ட்ரி கொடுப்பதால் தமிழ் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் “தி வாரியர்” திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் கிரீத்தி ஷெட்டி கலந்து கொண்டார். அப்பேட்டியில் “தமிழ் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?” என நிருபர் கேட்க அதற்கு பதிலளித்த கிரீத்தி ஷெட்டி “எனது வீட்டில் எனக்கு தமிழ் சொல்லித் தரவில்லை. என்னுடைய பாட்டி தமிழ் சீரீயல்களை பார்ப்பார். அவருடன் சேர்ந்து நானும் பார்ப்பேன். அப்படித் தான் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டேன்” என கூறியுள்ளார்.
“இப்படி எல்லாமா தமிழ் கற்றுக் கொள்ளலாம்? ஆச்சரியாக இருக்கிறதே” என பலரும் கூறி வருகின்றனர்.
