Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கே. ஜி. எஃப் நடிகர் மரணம் : அதிர்ச்சியில் திரை உலகம்

CINEMA

கே. ஜி. எஃப் நடிகர் மரணம் : அதிர்ச்சியில் திரை உலகம்

கே. ஜி. எஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் மோகன் காலமானார்

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் 2008 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “சங்கமா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

மேலும் கன்னட சின்னத்திரை நடிகராகவும் ஜொலித்தவர். இவர் சில நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்லாது பல திரைப்படங்களுக்கும் சின்னத்திரை நாடகங்களுக்கும் வசனங்களும் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கே. ஜி. எஃப் மற்றும் கே. ஜி. எஃப் 2 ஆகிய திரைப்படங்களில் பத்திரிக்கையாளருக்கு ராக்கி பாய்-ன் வரலாற்றை மிடுக்கோடு கம்பீரத்தோடும் வர்ணிக்கும் கதாப்பாத்திரமாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

“கேங்கோட வர்ரவன் கேங்க்ஸ்டர், தனியா வர்ரவன்மான்ஸ்டர்” என்று அவர் மின்னலாய் பேசிய வசனத்திற்கு திரையரங்கமே அதிர்ந்ததை நாம் மறந்திருக்கமாட்டோம்.

இந்நிலையில் வெகு நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் நேற்று பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் துர்திஷ்டவசமாக காலமானார்.

அவரது குடும்பத்திற்கு திரை உலகை சேர்ந்தவர்கள் பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த கன்னடத்தில் முன்னணி நடிகரான மோகன் ஜூனேஜாவுக்கு 54 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கே. ஜி. எஃப் சேப்டர் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் ஆனது. பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் 1000 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் மோகன் ஜூனேஜாவின் திடீர் மரணம் திரை உலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top