Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உடல் நலம் தேறி வீடு திரும்பிய சீயான் விக்ரம்…

CINEMA

உடல் நலம் தேறி வீடு திரும்பிய சீயான் விக்ரம்…

சீயான் விக்ரம் உடல் நலம் சரியில்லாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

நடிகர் சீயான் விக்ரம் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அனைவரும் அவருக்கு மாரடைப்பு என கூறி வந்த நிலையில் காவேரி மருத்துவமனை விக்ரமின் உடல் நிலை குறித்து ஒரு தகவலை வெளியிட்டது. அதில் “தமிழின் முன்னணி நடிகரான விக்ரம் சிறிது நேரத்திற்கு முன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு chest discomfort ஏற்பட்டிருந்தது. எங்கள் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது  விக்ரம் உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்து விட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தி மீண்டு வருகின்றனர்.

சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமல்ஹாசனுக்கு பின் பல வேடங்களில் நடிக்கும் திறமை பொருந்திய நடிகர் என்றும் கூறலாம்.

சிறு வேடம் என்றாலும் அந்த வேடத்திற்காக இவர் செய்யும் மெனக்கடல்கள் ரசிகர்களை “ஓ” போட வைக்கும். இவர் நடிப்பில் தற்போது “கோப்ரா”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன.

சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளியானது. அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். அத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதையம்சமாக அமைய உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top