CINEMA
“என் படத்துக்கு ரகுமான் மியூசிக்கா?”.. கதறி அழுத பவி டீச்சர்..
பவி டீச்சராக தமிழக இளைஞர்களிடம் அறிமுகமான பிரிகிடா சாகா, தன்னுடைய “இரவின் நிழல்” திரைப்படத்தை குறித்து பேசுகையில் உணர்ச்சி குழம்பால் கண்ணீர் வடித்தார்.
“ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரீஸின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் பிரிகிடா சாகா. இவர் இந்த வெப் சீரீஸில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஆதலால் இவர் பரவலாக பவி டீச்சர் என்றே அறியப்பட்டார். வெப் சீரீஸில் இவர் க்யூட் கேர்ளாக வலம் வந்து பல ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டார்.
இந்நிலையில் பிரிகிடா சாகா, பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தில் சிலக்கம்மா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நேற்று திரையரங்குகளில் “இரவின் நிழல்” திரைப்படம் வெளியானது. அப்போது சென்னையில் திரையரங்கு ஒன்றில் அதிகாலை நான்கு மணி காட்சியின் இடையில் ரசிகர்களுக்கு பார்த்திபனும், பிரிகிடா சாகாவும் காட்சி தந்தனர்.
அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரிகிடா சாகா முதலில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். அதன் பின் “எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏ ஆர் ரகுமான் சார் இந்த மாதிரி ஒரு படம் கொடுத்ததுக்கு பார்த்திபனுக்கு நன்றி என ஒரு முறை கூறினார். அவரே அப்படி கூறும்போது நான் என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை” என ஆனந்த கண்ணீர் வடித்தார்.
மேலும் பேசிய பிரிகிடா சாகா “என்னை மாதிரி யூட்யூப்ல நடிச்ச பொண்ணுக்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ஷ்ரேயா கோஷல் பாடலில் ஒரு வாய்ப்பு கிடைப்பது வேறு எந்த பொண்ணுக்கும் இப்படி வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு பார்த்திபன் சார்க்கு நன்றி” எனவும் கூறினார்.
